India
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் பெங்களூரு நோக்கி நேற்றிரவு ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 2.45 மணியளவில் இருசக்கர வாகனம் ஒன்று பேருந்து மீது மோதியது.
சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம், பேருந்துக்கு அடியில் சென்று டீசல் டேங்கில் மோதியதில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீ பரவியது.
தீ வேகமாக பரவியபோதிலும், பேருந்தில் சிக்கிக் கொண்டு கூச்சலிட்ட பயணிகள் உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பல பயணிகளை மீட்டனர். பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தின் ஜன்னலிலிருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர்.
இந்த கோர விபத்தில் பயணிகள் 25 பேர் உயிரிழந்தனர். சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும்,இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த துயர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!