India
மேக வெடிப்பால் உத்தரகாண்டில் பெரும் வெள்ளம் : அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் - அச்சத்தில் மக்கள்!
உத்தராகண்ட் மாநிலத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் உத்தர்காசி மலைப்பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு சேறும் வெள்ளமும் பெருக்கெடுத்து வந்ததில் கீர் காத் (Kheer Gadh) ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கண் இமைக்கும் நேரத்தில் தாராலி மலைச்சரிவில் இருந்த ஏராளமான குடியிருப்புகளும் கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளம் பெருக்கெடுத்து வந்த பாதை நெடுகிலும் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் சேற்று மண் மட்டுமே நிரவிக்கிடக்கிறது.
இதில் 50க்கும் மேற்பட்டோர் சேற்றுக்குள் புதையுண்டு மாயமாகினர். இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தர்காண்ட் அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிக்காக உத்தர்காசிக்கு ராணுவம் சென்றுள்ளது. சேற்றுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பேரழிவில் ஒரு சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் நிலச்சரிவு, வெள்ளத்தில் குடியிருப்புகளே அடித்து செல்லப்பட்டதால், உயிரிழப்பும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடர் குழுவுடன் ராணுவத்தினரும் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் மேக வெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”உத்தரகண்ட் மாநிலம் தாராலியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட கடுமையான பேரழிவில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் செய்திகள் மிகவும் வருத்தத்தையும் கவலையையும் தருகின்றன.
நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு நிர்வாகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!