India
வரலாற்று சாதனை படைத்த சுபான்ஷு சுக்லா... பத்திரமாக திரும்பிய விண்வெளி வீரர்கள் - விவரம் என்ன ?
'ஆக்ஸிசம் -4' என்ற திட்டத்தின் கீழ் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய நான்கு பேர் கொண்ட குழு, 'டிராகன்'விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கிய பயணத்தை கடந்த 25ஆம் தேதி மதியம் வெற்றிகரமாகத் தொடங்கியது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட இந்த குழுவினர் 26 ஆம் தேதி மாலையில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றடைந்தார்கள். அதனைத் தொடர்ந்து 14 நாட்கள் அங்கு இவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று அதே 'டிராகன்'விண்கலம் மூலம் இந்த 4 பேரும் இன்று நாடு திரும்பினர். இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடல் பகுதியில் வெற்றிகரமான கடலில் இறக்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய டிராகன் விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக பாராசூட் மூலம் கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. தரையிறங்கிய டிராகன் விண்கலத்தை கப்பலில் ஏற்றி அமெரிக்க கடற்படை வீரர்கள் கரைக்கு கொண்டு சென்று, அதிலிருந்த விண்வெளி வீரர்களை ஒவ்வொருவராக வெளியே அழைத்து வந்தனர். விண்வெளி வீரர்கள் அனைவரும் நன்றாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!