India
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இவ்வாண்டு ஜூனவரி முதல் மார்ச் மாதம் வரை கடந்த 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சி தகவலை மாநில அமைச்சர் மக்ரந்த் பாட்டீல் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார். மேற்கு விதர்பாவில் - யவத்மால், அமராவதி, அகோலா, புல்தானா மற்றும் வாசிம் ஆகிய பகுதிகளில் 257 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதேபோல் ஹிங்கோலி மாவட்டத்தில் 24 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். பருவமழை மற்றும் இயற்கை பேரிடர்களால் பயிர்கள் சேதமடைந்ததே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விவசாயிகள் பற்றி மோடி அரசுக்கு கவலை இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி MP விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் 3 மாதங்களில் தற்கொலை செய்திருக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் கடன், பாழாகும் பயிர், உரம், விதைகள், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு போன்றவை விவசாயிகளின் கழுத்தில் சுருக்காக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் மோடியோ கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்கிறார்" என விமர்சித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!