India
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இவ்வாண்டு ஜூனவரி முதல் மார்ச் மாதம் வரை கடந்த 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சி தகவலை மாநில அமைச்சர் மக்ரந்த் பாட்டீல் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார். மேற்கு விதர்பாவில் - யவத்மால், அமராவதி, அகோலா, புல்தானா மற்றும் வாசிம் ஆகிய பகுதிகளில் 257 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதேபோல் ஹிங்கோலி மாவட்டத்தில் 24 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். பருவமழை மற்றும் இயற்கை பேரிடர்களால் பயிர்கள் சேதமடைந்ததே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விவசாயிகள் பற்றி மோடி அரசுக்கு கவலை இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி MP விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் 3 மாதங்களில் தற்கொலை செய்திருக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் கடன், பாழாகும் பயிர், உரம், விதைகள், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு போன்றவை விவசாயிகளின் கழுத்தில் சுருக்காக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் மோடியோ கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்கிறார்" என விமர்சித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!