India
டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை... பெட்ரோல் பங்குகளில் தீவிர கண்காணிப்பு அமல் !
டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், பல்வேறு காரணங்களால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு பழைய வாகனங்கள் வெளியிடும் அதிகளவிலான கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணமாக திகழ்கிறது.
இதனால் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களும், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் இன்று முதல் தலைநகர் டெல்லியில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த டெல்லியில் உள்ள 400க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் போக்குவரத்து துறை, மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு காலாவதி ஆன வாகனங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சி.என்.ஜி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!