India
கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத இயற்கை மாற்றம்... மே மாதம் மட்டும் இயற்கை சீற்றத்தால் 260 பேர் பலி !
இந்தியாவில் பொதுவாக மே மாதம் அதிகளவில் வெப்பம் ஏற்படும் மாதமாகும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது. இது இந்தியாவில் இதற்கு முன்னர் நடந்திராத இயற்கை நிகழ்வாக அமைந்தது.
அதிலும் குறிப்பாக தென் மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பொழிவுக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மே மாதத்தில் இந்தியாவில் இயல்பிற்கு அதிக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு வானிலை நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது.30 அதித கனமழை நிகழ்வுகள், 155 மிக கனமழை நிகழ்வுகள், 514 கனமழை நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு வெவ்வேறு வானிலை நிகழ்வுகளால் நாடு முழுவதும் மே மாதத்தில் மட்டும் 260 பேர் உயிரிழந்தனர் என்றும், குறிப்பாக இடி,மின்னல் தாக்கி 199 பேரும், கனமழை மற்றும் வெள்ள பெருக்கில் 58 பேரும், சூறைக்காற்றில் 3 பேர் என 260 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!