India
தமிழ்நாடு, கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை... 1999 ஆம் ஆண்டுக்கு பின் நடந்த மாற்றம் என்ன ?
கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே இன்றே தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
இன்று காலை கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த 13ஆம் தேதி அந்தமானில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை படிப்படியாக முன்னேறி தற்போது இந்திய நிலப்பரப்பை எட்டியுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளா, கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது தென்மேற்குப் பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில், மழை அளவு அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இருபதாம் நூற்றாண்டில் 1999 ஆம் ஆண்டு மே 19 தேதி 13 நாட்கள் முன்னதாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!