India
”நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்புச் சட்டமே உயர்ந்தது” : ஜகதீப் தன்கருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதில்!
மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குடியரசு குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடர்ந்து பேசி வருகிறார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவரின் கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ”நாடாளுமன்றம் மிக உயர்ந்தது என்று சொல்வது நல்ல கூற்று கிடையாது. அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது.
நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசியலமைப்பின் நான்கு மூலைகளுக்குள் செயல்படவேண்டும். நாடாளுமன்றம் செயல்படாதபோது, நிர்வாகம் தனது கடமைகளை செய்யாதபோது மட்டுமே நீதித்துறை தலையிடும்.
மேலும் நீதித்துறையின் அதிகப்படியான தலையீடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் கொள்கை முடிவுகள் தொடர்பான பொதுநல வழக்குகளை கையாள உச்சநீதிமன்றம் தயங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!