India
”நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்புச் சட்டமே உயர்ந்தது” : ஜகதீப் தன்கருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதில்!
மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குடியரசு குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடர்ந்து பேசி வருகிறார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவரின் கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ”நாடாளுமன்றம் மிக உயர்ந்தது என்று சொல்வது நல்ல கூற்று கிடையாது. அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது.
நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசியலமைப்பின் நான்கு மூலைகளுக்குள் செயல்படவேண்டும். நாடாளுமன்றம் செயல்படாதபோது, நிர்வாகம் தனது கடமைகளை செய்யாதபோது மட்டுமே நீதித்துறை தலையிடும்.
மேலும் நீதித்துறையின் அதிகப்படியான தலையீடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் கொள்கை முடிவுகள் தொடர்பான பொதுநல வழக்குகளை கையாள உச்சநீதிமன்றம் தயங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!