India

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வாட் வரி உயர்தப்பட்டு அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் ரூபாய் 2 விலை உயர்த்தப்பட்டு இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாஹேவில் ரூ. 91.92 மற்றும் ஏனாமில் ரூ.94.92 ஆக விற்பனையானது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ. 84.31, மாஹேவில் ரூ. 81.90 மற்றும் ஏனாமில் ரூ.84.75 இருந்து வந்தது.

தற்போது வாட் வரி உயர்வால் புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.96.24 பைசாவிற்கும், இதேபோல் டீசல் லிட்டருக்கு ரூ.1.99 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.86.47 க்கும் இன்று காலை 6 மணி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திமுக ஆட்சியில் தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உறுதி !