India
திருடப்பட்ட ஆக்சிஜன் குழாய்கள்: மூச்சு விட முடியாமல் உயிரிழந்த குழந்தைகள்: ம.பி மருத்துவமனையில் கொடூரம் !
பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் என்ற நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் புதியதாக பிறந்த சில குழந்தைகளுக்கு சுவாசத்துக்காக ஆக்சிஜன் குழாய் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த பைப் லைன் குழாய் தாமிரத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நோட்டமிட்ட சில திருடர்கள், மருத்துமனையில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் செல்லும் அந்த தாமிரத்திலான பைப் லைனை திருடிச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டுள்ளது. ஆனால் நீண்ட நேரம் இதனை அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் கவனிக்காத நிலையில், 12 குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் அவர் உடல்நிலை மோசமடிந்துள்ளது.
அதன்பின்னரே இதை கண்டறிந்த மருத்துவர்கள் அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் இந்த சிகிச்சை பலனளிக்காமல் அந்த குழந்தைகளில் ஏராளமானோர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!