India
திருடப்பட்ட ஆக்சிஜன் குழாய்கள்: மூச்சு விட முடியாமல் உயிரிழந்த குழந்தைகள்: ம.பி மருத்துவமனையில் கொடூரம் !
பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் என்ற நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் புதியதாக பிறந்த சில குழந்தைகளுக்கு சுவாசத்துக்காக ஆக்சிஜன் குழாய் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த பைப் லைன் குழாய் தாமிரத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நோட்டமிட்ட சில திருடர்கள், மருத்துமனையில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் செல்லும் அந்த தாமிரத்திலான பைப் லைனை திருடிச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டுள்ளது. ஆனால் நீண்ட நேரம் இதனை அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் கவனிக்காத நிலையில், 12 குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் அவர் உடல்நிலை மோசமடிந்துள்ளது.
அதன்பின்னரே இதை கண்டறிந்த மருத்துவர்கள் அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் இந்த சிகிச்சை பலனளிக்காமல் அந்த குழந்தைகளில் ஏராளமானோர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!