India
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவ.13 ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவ.20 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் இன்று காலையில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது.
இதில் ஹேமந்த் சோரன் தலைமையிலான இந்தியா கூட்டணி 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மேலும் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகள் பெரும்பான்மை தேவை என்ற நிலையில் இந்தியா கூட்டணி 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி உறுதியாகியுள்ளது.
அதேபோல், பா.ஜ.க கூட்டணி 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த பா.ஜ.கவின் கணக்கு தவிடுபொடியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முன்னிலை நிலவரம்:
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - 29
காங்கிரஸ் - 15
பா.ஜ.க - 22
ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 4
மற்ற கட்சிகள் ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!