India
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவ.13 ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவ.20 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் இன்று காலையில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது.
இதில் ஹேமந்த் சோரன் தலைமையிலான இந்தியா கூட்டணி 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மேலும் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகள் பெரும்பான்மை தேவை என்ற நிலையில் இந்தியா கூட்டணி 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி உறுதியாகியுள்ளது.
அதேபோல், பா.ஜ.க கூட்டணி 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த பா.ஜ.கவின் கணக்கு தவிடுபொடியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முன்னிலை நிலவரம்:
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - 29
காங்கிரஸ் - 15
பா.ஜ.க - 22
ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 4
மற்ற கட்சிகள் ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
Also Read
-
விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!