India
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கள் செய்யப்படுகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆங்கிலத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த வேண்டும் என்று கிஷன் சந்து ஜெயின் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்தியில் மட்டும் ஏன் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்?. உச்ச நீதிமன்றம் பல்வேறு மாநிலங்களில் இருந்து தாக்கல் செய்யக்கூடிய வழக்குகளை விசாரிக்கிறது.
அப்படியானால் அனைத்து மாநில மொழிகளிலும் வழக்கு விசாரணையை நடத்த முடியுமா?. இது நடைமுறை சாத்தியமற்றது. இந்த மனு தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் விசாரிக்க முடியாது என கூறி இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!