India
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
கேரளாவின் சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி - திருவனந்தபுரம் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் கொச்சின் பாலத்தை கடந்தது.
அப்போது, ரயில் பாதையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 தொழிலாளர்கள் மீது ரயில் மோதியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழ்நாடு மாநிலம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி, வள்ளி, லஷ்மணன் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவரின் உடல் ஆற்றில் விழுந்ததால், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் நடந்த போது, பத்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ரயில் வருவதை அறிந்த 6 பேர் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரயில் பாதை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
சமீப காலமாக நாட்டில் ரயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ரயில்வே பாதுகாப்பு முறைகளில் குறைபாடுகள் இருப்பதைக் காட்டுவதாக குற்றம் சாட்டி உள்ள பொதுமக்கள், ஒன்றிய அரசு இதுபோன்ற விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!
-
“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!