India
குற்றவாளிக்காக காவல்நிலையத்தில் ஸ்டூடியோ வசதி : பஞ்சாப் காவல்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் !
மும்பையில் அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாதநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரபல நடிகர் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பின்னணியில் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருந்தது தெரியவந்தது.
வழக்கு ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குஜராத் சிறையில் இருந்துகொண்டே இந்தியா முழுவதும் தனது கும்பல்களை இயக்கிவருகிறார். இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் பேட்டிகொடுக்க காவல் நிலையத்தில் ஸ்டூடியோ வசதியை ஏற்படுத்திக்கொடுத்த காவல்துறையின் செயலுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பஞ்சாப் சிறையில் இருந்தபோது டி.வி சேனல் ஒன்றுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் பேட்டி அளித்திருந்தார். இது நேரலையில் ஒளிபரப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த போலீஸ் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். மேலும் இந்த பேட்டிக்காக காவல் நிலையத்தில் ஸ்டூடியோ வசதியை ஏற்படுத்திக்கொடுத்த காவல்துறையின் செயலும் அம்பலமானது. இதன் காரணமாக இது குறித்து புதிய சிறப்பு விசாரணைக்கு குழு விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!