India
கோவிலில் வைத்து கணவரை கட்டிப்போட்டு மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி !
மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த புதிதாக திருமணமான தம்பதியினர் அங்குள்ள பாபா பைரவா கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு வழிபாட்டினை முடித்த அந்த தம்பதியினர் அங்குள்ள ஒரு பகுதியில் தங்கியிருந்துள்ளனர்.
அப்போது அவர்கள் இல்லாத பகுதியில் யாரும் இல்லாததை கண்ட 8 பேர் கொண்ட ஒரு கும்பல் இந்த தம்பதியினரிடம் வந்து தகராறு செய்துள்ளனர். மது போதையில் இருந்த அந்த கும்பல் கணவரைத் தாக்கி அவரை கட்டிபோட்டுள்ளனர்.
அதன் பின்னர் மனைவியை அந்த கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதோடு இந்த கொடூர செயலை அந்த கும்பல் வீடியோவாகவும் பதிவு செய்து, இந்த சம்பவம் பற்றி வெளியே சொன்னால் விடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் குறித்து அந்த தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட ராவிஷ் குப்தா, லவ்குஷ் கோரி, ராஜேந்திர கோரி, கருட் கோரி, தீபக் கோரி, ராம்கிஷான் கோரி மற்றும் சுசில் கோரி உள்ளிட்ட 7 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்நிஷ் கோரி என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
-
ரூ.100 கோடியில் முடிவுற்ற பணிகள் முதல் ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் வரை... முதலமைச்சர் அசத்தல்!
-
மீண்டும்... மீண்டும்.. அன்று பார்க்.. இன்று சிவகாசி.. ரயில் நிலையம் மூலம் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசு!
-
11.60 இலட்சம் மக்களுக்காக... 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்! : திராவிட மாடலின் மற்றொரு சாதனை!
-
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை திறப்பு! - முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!