India
காற்றுத் தரத்தின் பட்டியலில், டெல்லிக்கு ‘மிகவும் கவலைக்கிடம்’ நிலை!: தலைநகரில் அதிகரிக்கும் காற்று மாசு!
இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு, வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, மூச்சு சிக்கல்களால் துன்புறும் நோயாளிகளின் எண்ணிக்கையும், சுமார் 40% அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதனால், டெல்லி அரசாலும், டெல்லி உயர்நீதிமன்றத்தாலும் பல்வேறு மாசுத்தடுப்பு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த அக்டோபர் 24ஆம் நாள், “டெல்லி காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக, ஜனவரி 1 வரை, டெல்லியின் எந்த பகுதியிலும் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை ஏற்று, பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்ததோடு மட்டுமல்லாமல், நீர் பாய்ச்சல் மூலம் காற்றின் திடத்தை குறைப்பது போன்ற, பல்வேறு மாசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது டெல்லி அரசு.
எனினும், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள காற்று தரத்தின் பட்டியலில், டெல்லிக்கு ‘மிகவும் கவலைக்கிடமான’ நிலை தான் நீடிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், டெல்லி மக்கள் என்ன செய்வதென்று அறியாது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லி தலைநகரில் காற்று மாசு உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மிரண்டு இருக்கும் நயினார் நாகேந்திரன்” : கடுமையாக சாடிய அமைச்சர் சேகர்பாபு!
-
“நன்றாக சாப்பிடுங்கள்… படியுங்கள்… விளையாடுங்கள்… வாழ்க்கை நன்றாக இருக்கும்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!