India
பா.ஜ.க MLA-வை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் : காரணம் என்ன?
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பசன கௌடா பாட்டீல். இவர் அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது,தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது என்று, அமைச்சர் மனைவி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடும் வகையில் பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மாநில மகளிர் ஆணையத்தில் அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு பெண்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்கு பசன கௌடா பாட்டீல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!