India
பா.ஜ.க MLA-வை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் : காரணம் என்ன?
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பசன கௌடா பாட்டீல். இவர் அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது,தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது என்று, அமைச்சர் மனைவி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடும் வகையில் பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மாநில மகளிர் ஆணையத்தில் அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு பெண்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்கு பசன கௌடா பாட்டீல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!