India
4ஆவது நாளாக டெல்லி லடாக் இல்லத்தில் தொடரும் உண்ணாநிலைப் போராட்டம்! : புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க!
இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை (6th schedule), பழங்குடி மக்களின் பகுதிகளை தன்னாட்சிப் பகுதிகளாக நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது.
அதன்படி, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள சுமார் 10 மாவட்டங்கள், தன்னாட்சி உரிமைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்திய நிலப்பரப்பின் வடமுனையில் இருக்கும் லடாக் பகுதியிலும் தன்னாட்சி உரிமைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்டகால கோரிக்கையாக அமைந்துள்ளது.
அதன் படி, லடாக்கில் தன்னாட்சி உரிமை கேட்டு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், அதனை ஒன்றிய பா.ஜ.க அரசு புறக்கணித்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் அமைதியான வழியில் பேரணி செல்ல இருந்த லடாக் மக்களை இடைமறித்து, கைதும் செய்தது டெல்லி காவல்துறை.
இதனையடுத்து, பா.ஜ.க.வின் புறக்கணிப்பை எதிர்த்தும், லடாக்கிற்கு தன்னாட்சி உரிமை வழங்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் தலைமையில் லடாக் மக்கள், 4 ஆவது நாளாக டெல்லி லடாக் இல்லத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், ஒன்றிய பா.ஜ.க அரசு இதுவரை, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை முன்வராமல், தேர்தல்களிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறது.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!