India
9 இலட்சம் மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆதார்! : உரிமையும், சலுகையும் தராமல் இழுத்தடித்த பா.ஜ.க!
பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேடு (NRC) சுமார் 19 இலட்சம் பேரை குடியுரிமையற்றவர்களாக மாற்றியது மட்டுமல்லாது, சுமார் 9 இலட்சம் மக்களிடம் உரிமை பறிப்புகளிலும் ஈடுபட்டுள்ளது.
NRC நடைமுறைப்படுத்தம் என்கிற பெயரில், ஆண்டுக்கணக்கில் சுமார் 9 இலட்சம் மக்களுக்கு ஆதார் அட்டை மறுக்கப்பட்டு வந்துள்ளது.
ஆதார் அட்டை மறுக்கப்பட்டதால், அரியானா மாநில அரசு வழங்கும் உதவித்தொகையும், இதர சலுகைகளும் அம்மக்களுக்கு மாநில பா.ஜ.க அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போதும், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல், நீண்டகாலத்திற்கு பிறகு கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது என்ற சமாளிப்புடன், கடந்த மாதம் ஆதார் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது அசாம் பா.ஜ.க அரசு.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எளிதில் முடியவேண்டிய பணியை, இவ்வளவு காலம் தாமதமாக்கி, சலுகை மற்றும் உரிமை புறக்கணிப்பில் ஈடுபட்ட அசாம் அரசிற்கு எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம் என ஆதார் இணைப்பு பெற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், பா.ஜ.க முன்னெடுத்திருக்கிற NRC உள்ளிட்ட பல உரிமை பறிப்பு நிகழ்வுகள் இன்றளவும் தொடர்ந்தே வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!