India
வெளிநாடு வாழ் இந்தியர்களின் தகவல்களை சேகரிக்க வேண்டும்! : மாநில அரசுகளுக்கு, ஒன்றிய அரசு உத்தரவு!
தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், வியட்நாம் நாடுகளுக்கு தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கு சென்றவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு.
இந்த நாடுகளுக்கு பணிக்கு சென்றவர்கள் சைபர் மோசடி பணிகளை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த நாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட்டனர்.
2022 ஜனவரி முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை இந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 73,138 பணிக்கு சென்றுள்ளனர். அதில் 29,466 பேர் இன்னும் நாடு திருப்பவில்லை. இதில் அதிகமாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 3,667 பேர் உள்ளனர்.
மகாராஷ்டிராவிலிருந்து 3,233 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 3,124 பேரும் சென்றுள்ளதாக ஒன்றிய அரசின் கணக்குகள் தெரிவிக்கின்றன. இதில் அதிகமானோர் தாய்லாந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நாடுகளுக்கு பணிக்கு சென்றவர்கள் சைபர் கொத்தடிமைகளாக சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து வெளியுறவுத்துறை, உள்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தை நடத்தினர். அதன் பின்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பணிக்கு சென்றவர்கள் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரிக்க மாநில அரசுகளை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!