India
4 ஆவதாகவும் பெண் குழந்தை : தந்தை செய்த கொடூர செயல் - உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவாகர். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது மனைவி உயிரிழந்தார். பின்னர் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இரண்டாவது மனைவிக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்த்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த திவாகர் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார்.
இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தந்தை திவாகரை கைது செய்தனர்.
Also Read
-
நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை... எதிர்க்கட்சித் தலைவராகும் உதயநிதி... - விவரம் உள்ளே!
-
“மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! மக்களுக்கு கொடுக்க மனசு வேணும்!”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்நாட்டில் இனி அனைவருக்கும் இலவச மின்சாரம் இல்லை! : முதல்வர் விஜய் போட்ட முதல் கையெழுத்து!
-
இதுதான் மாற்றமா? : முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 ஆவதாக இசைக்கப்பட்ட ‘தமிழ்த்தாய்’ வாழ்த்து!
-
”புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. உடனிருந்த தோழமைக் கட்சிகளுக்கு நன்றிகள்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!