India
4 ஆவதாகவும் பெண் குழந்தை : தந்தை செய்த கொடூர செயல் - உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவாகர். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது மனைவி உயிரிழந்தார். பின்னர் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இரண்டாவது மனைவிக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்த்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த திவாகர் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார்.
இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தந்தை திவாகரை கைது செய்தனர்.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !