India
4 ஆவதாகவும் பெண் குழந்தை : தந்தை செய்த கொடூர செயல் - உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவாகர். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது மனைவி உயிரிழந்தார். பின்னர் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இரண்டாவது மனைவிக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்த்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த திவாகர் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார்.
இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தந்தை திவாகரை கைது செய்தனர்.
Also Read
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!