India
சாலையில் செல்லும் போது திடீரென பற்றி எரிந்த BMW கார்: நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் இருந்து மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் BMW சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் சூரத்கல் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது திடீரென பற்றி எரிந்தது.
கார் பற்றி எரிந்த சில நிமிடத்திலேயே அதில் இருந்தவர்கள் வெளியே வந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருந்தும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை அருகே BMW கார் பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!
-
ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - முதற்கட்ட பணியில் 1 லட்சம் தன்னார்வலர்கள்!
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !