India
சாலையில் செல்லும் போது திடீரென பற்றி எரிந்த BMW கார்: நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் இருந்து மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் BMW சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் சூரத்கல் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது திடீரென பற்றி எரிந்தது.
கார் பற்றி எரிந்த சில நிமிடத்திலேயே அதில் இருந்தவர்கள் வெளியே வந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருந்தும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை அருகே BMW கார் பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!