India
சாலையில் செல்லும் போது திடீரென பற்றி எரிந்த BMW கார்: நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் இருந்து மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் BMW சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் சூரத்கல் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது திடீரென பற்றி எரிந்தது.
கார் பற்றி எரிந்த சில நிமிடத்திலேயே அதில் இருந்தவர்கள் வெளியே வந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருந்தும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை அருகே BMW கார் பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!