India
சாலையில் செல்லும் போது திடீரென பற்றி எரிந்த BMW கார்: நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் இருந்து மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் BMW சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் சூரத்கல் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது திடீரென பற்றி எரிந்தது.
கார் பற்றி எரிந்த சில நிமிடத்திலேயே அதில் இருந்தவர்கள் வெளியே வந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருந்தும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை அருகே BMW கார் பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!