India
ஆந்திரா - தெலங்கானா மழை வெள்ளம்! : 27 பேர் உயிரிழப்பு - 21 தொடர்வண்டிகள் ரத்து!
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பெய்த அதிகனமழை காரணமாக சுமார் 110 கிராமங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. நேற்றைய (செப்டம்பர் 1) நாள் மட்டும் சுமார் 28.5 செ.மீ அளவு மழை நீர் பதிவானது.
இதனால், இரு மாநிலங்களிலும் இயல்புநிலை கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், அதிகனமழையால், ஆறுகள் நிறைந்து பலர் ஆற்றில் அடித்துச்செல்வது போன்ற காணொளிகளும் இணையத்தில் பரவி, கூடுதல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் 1 இலட்சம் ஹெக்டருக்கும் மேலாக விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 27 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 110 கிராமங்களின் மழை நீர் சூழ்ந்துள்ளன.
பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை விடப்பட்டு, சுமார் 21 தொடர்வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஆந்திரா, தெலுங்கானாவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்கனவே, 12 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை ஆந்திராவிற்கு விரைந்துள்ளது.
இரு மாநில முதல்வர்களும் அவசர கால நடவடிக்கைகளாக நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!