India
மயக்க மருந்து கொடுத்து செவிலியர் பாலியல் வன்கொடுமை : மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூரம் !
மகாராஷ்டிராவில் ரத்னகிரியைச் சேர்ந்த 19 வயது பயிற்சி செவிலியர் ஒருவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அந்த செவிலியர் ஆட்டோ ஒன்றில் ஏறி வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த செவிலியருக்கு அருந்த தண்ணீர் கொடுத்துள்ளார். அதனை அந்த செவிலியர் அருந்திய நிலையில், அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அவர் ஆட்டோவில் மயங்கி சரிந்துள்ளார்.
செவிலியர் மயங்கியதை உறுதிப்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்றதும், செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து அவரை அங்கேயே போட்டுவிட்டு திரும்பியுள்ளார்.
மயக்கம் தெளிந்து எழுந்த அந்த செவிலியர் தனக்கு நடந்த அந்த கொடுமையை அறிந்து, அங்கிருந்து வீட்டுக்கு வந்து இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், குற்றவாளியை கண்டுபிடிக்க போலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகக் கூறி, செவிலியரின் உறவினர்கள் ரத்னகிரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
11.60 இலட்சம் மக்களுக்காக... 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்! : திராவிட மாடலின் மற்றொரு சாதனை!
-
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை திறப்பு! - முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!
-
U19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்த இந்திய இளம் அணி.. துவம்சம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான்!
-
மத்திய பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடல்! : ஒன்றிய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!