India
”காந்தியிடம் கோட்சே எப்போதும் தோற்றுத்தான் போவான்” : மோடியை விமர்சித்த சுப்ரியா ஸ்ரீநேட்!
உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். கிவ் தலைநகருக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் காந்தியிடம் கோட்சே எப்போதும் தோற்றுத்தான் போவான் என காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பொய்மை உண்மையின் முன் தலைவணங்குகிறது. அகங்காரம் பணிவின் முன் தலைவணங்குகிறது.வெறுப்பு அன்பின் முன் தலைவணங்குகிறது.கோழைத்தனம் வீரத்தின் முன் தலைவணங்குகிறது. இந்த நாடு காந்தியின் நாடு. இங்கு காந்தியிடம் கோட்சே எப்போதும் தோற்றுத்தான் போவான்." என தெரிவித்துள்ளார்.
தேச தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மீதான வெறுப்பை பாஜக மற்றும் இந்துத்வா கும்பல்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறது. காந்தியை சுட்டுக் கொலை செய்த கோட்சேவை பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கொண்டாடி வருகிறது. இவருக்கு சிலையும் வைத்து இருக்கிறார்கள். இப்படி இருக்க இந்தியாவில் காத்தியை விமர்சித்து விட்டு வெளிநாடுகளில் அவரை புகழ்வதை பிரதமர் மோடியும் அவரது கூட்டமும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !