India
”காந்தியிடம் கோட்சே எப்போதும் தோற்றுத்தான் போவான்” : மோடியை விமர்சித்த சுப்ரியா ஸ்ரீநேட்!
உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். கிவ் தலைநகருக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் காந்தியிடம் கோட்சே எப்போதும் தோற்றுத்தான் போவான் என காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பொய்மை உண்மையின் முன் தலைவணங்குகிறது. அகங்காரம் பணிவின் முன் தலைவணங்குகிறது.வெறுப்பு அன்பின் முன் தலைவணங்குகிறது.கோழைத்தனம் வீரத்தின் முன் தலைவணங்குகிறது. இந்த நாடு காந்தியின் நாடு. இங்கு காந்தியிடம் கோட்சே எப்போதும் தோற்றுத்தான் போவான்." என தெரிவித்துள்ளார்.
தேச தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மீதான வெறுப்பை பாஜக மற்றும் இந்துத்வா கும்பல்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறது. காந்தியை சுட்டுக் கொலை செய்த கோட்சேவை பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கொண்டாடி வருகிறது. இவருக்கு சிலையும் வைத்து இருக்கிறார்கள். இப்படி இருக்க இந்தியாவில் காத்தியை விமர்சித்து விட்டு வெளிநாடுகளில் அவரை புகழ்வதை பிரதமர் மோடியும் அவரது கூட்டமும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!