India
சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணிக்கு அதிக மவுசு : 5 ஆண்டில் ரூ.8.5 கோடி வருவாய்!
கேரள மாநிலத்தில் “புட் பார் பிரீடம்" என்ற திட்டம் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டடது. இந்த திட்டத்தில் சிறையில் இருக்கும் கைதிகள் தயாரிக்கும் உணவுகள் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம், திருச்சூர், கண்ணூர், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் 21 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில் கண்ணூர் சிறையில் கைதிகள் தயாரிக்கும் சிக்கன் பிரியாணிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டில் மட்டும் ரூ.8.5 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது.
இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற சிறைவாசிகள் விடுதலையான பிறகு அவர்கள் சொந்தமாக உணவகம் வைக்கவும் பெரும் உதவியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!