India
காதலித்த மகள் : தந்தை செய்த அதிர்ச்சி செயல் - மத்திய பிரதேசத்தில் பகீர் சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியவர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண பிரஜாபதி. இவரது மகள் சஞ்சனா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திர ஜதே என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் சஞ்சான வீட்டிற்கு தெரிந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் காதல் தொடர்ந்ததால் சஞ்சான வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சனாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே மீண்டும் காதல் தொடர்பான சண்டை ஏற்பட்டுள்ளது. ஆப்போது ஆவேசமடைந்த தந்தை பிரஜாபதி மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சஞ்சனா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பிறகு காதலித்தால் மகளை கொலை செய்த தந்தை பிரஜாபதியை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!