India
விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட் : EOS-08 செயற்கைக் கோளின் சிறப்புகள் என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் EOS -08 செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பேரிடர் கால கண்காணிப்பு, காலநிலை, காட்டுத் தீ கண்காணிப்பு பணிகளை EOS-8 செயற்கைகோள் ஆய்வு செய்யும். அதோடு கடல் காற்றின் வேகம், மண்ணின் ஈரப்பதம், ஹிமாலய மலையின் பனிப்பொழிவு அளவு தரவுகளையும் EOS-8 தரவல்லது.
அதோடு EOIR என்ற கருவி பகல் மற்றும் இரவு நேரங்களில் புகைப்படங்களை எடுத்து அனுப்பும். மேலும், இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப்இந்தியா ஸ்டார்அப் நிறுவனம் வடிவமைத்துள்ள 200 கிராம் எடை கொண்ட ‘எஸ்ஆர்-டெமோசாட்’ எனும் நானோ செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
SSLV-D1 என்ற ராக்கெட் 2022 ஆண்டு ஆகஸ்ட் 7 தேதி மைக்ரோசாட் 2A மற்றும் AzaadiSAT செயற்கைக்கோளுடன் ஏவப்பட்டது. ஆனால் இது தோல்வியடைந்தது.
பின்னர் SSLV-D2 ராக்கெட்டி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி Janus-1, AzaadiSAT-2, EOS-07 செயக்கைக் கோளுடன் பூமியிலிருந்து 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. இந்நிலையில்தான் இன்று SSLV-D3 ராக்கெட் வெற்றிக் கரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !