India
வயநாடு நிலச்சரிவு : கேரள வங்கி எடுத்த முக்கிய முடிவு - அது என்ன?
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இன்னும் 10 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 14 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. இந்த பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள மாநில அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நிலச்சரிவு பகுதிகளை ஆய்வு செய்த பிறகு கூட இன்றும் தேசிய பேரிடராக அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசுக்கூட ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வயநாட்டிற்காக கைகொடுத்து உதவி வருகிறார்கள்.
இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது இவ்வங்கி ஊழயர்கள் தங்களது 5 நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்காக கொடுத்துள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!