India
வங்கதேசத்தினர் என இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் : உத்தர பிரதேசத்தில் இந்துத்துவா கும்பல் அட்டூழியம்!
வங்கதேச நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம் இங்கு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த செய்தி பரவியதை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் தில் இந்து ரக்சா தளம் என்ற இந்துத் துவா அமைப்பினர் அங்குள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
”வங்கதேச நாட்டில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் இங்கு வாழக்கூடாது. வங்கதேசத்திற்கே செல் லுங்கள்” என இந்து ரக்சா தளம் அமைப் பின் குண்டர்கள் பெண்கள், சிறுமிகள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி குடிசைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்த 2 பேரை கைது செய்துள்ளனர்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !