India
அதானி துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் : குஜராத்தில் அதிர்ச்சி !
குஜராத் மாநிலத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் திடீரென சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான பெட்டிகள் அங்கு இருந்துள்ளது.
தொடர்ந்து அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ரூ. 110 கோடி மதிப்புள்ள 68 லட்சம் டிராமடோல் என்ற போதை மாத்திரைகள் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த போதை மாத்திரைகள் ஆப்பிரிக்க நாடுகளான சியரா லியோன் மற்றும் நைஜீரியாவுக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் ராஜ்கோட்டை சேர்ந்த வணிக ஏற்றுமதியாளர் பெயரில் இந்த போதை பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டதும் தெரியவந்தது.
சமீப காலமாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரம் என்று கூறும் வகையில் குஜராத்தில் அதிகளவில் போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்தே நாடு முழுவதும் அவை பரப்பப்படுகிறது என்றும் விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?