India
அதானி துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் : குஜராத்தில் அதிர்ச்சி !
குஜராத் மாநிலத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் திடீரென சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான பெட்டிகள் அங்கு இருந்துள்ளது.
தொடர்ந்து அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ரூ. 110 கோடி மதிப்புள்ள 68 லட்சம் டிராமடோல் என்ற போதை மாத்திரைகள் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த போதை மாத்திரைகள் ஆப்பிரிக்க நாடுகளான சியரா லியோன் மற்றும் நைஜீரியாவுக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் ராஜ்கோட்டை சேர்ந்த வணிக ஏற்றுமதியாளர் பெயரில் இந்த போதை பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டதும் தெரியவந்தது.
சமீப காலமாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரம் என்று கூறும் வகையில் குஜராத்தில் அதிகளவில் போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்தே நாடு முழுவதும் அவை பரப்பப்படுகிறது என்றும் விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!