India
பீகார், ஆந்திராவுக்கு கூடுதல் நிதி : பட்ஜெட்டில் வெளிப்பட்ட பா.ஜ.கவின் பயம்!
நாடாளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணி வைத்துக் கொண்டு மூன்றாவது முறையாக பா.ஜ.க ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், 2021-25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு பல புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக பீகாரில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் பீகார் மாநிலத்துக்கு சாலை திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்தர் வரை புதிய பொருளாதார வளர்ச்சி திட்டம் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.
அதேபோல், ஆந்திரா மாநிலத்திற்கு விசாகப்பட்டினம் - சென்னை தொழில்பேட்டைக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன. மேலும் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு கூடுதலாக திட்டங்களையும், நிதிகளையும் ஒன்றிய பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது பா.ஜ.கவின் பயத்தை காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!