India
மனோரமா கேத்கருக்கு ஜூலை 20 வரை போலீஸ் காவல் : பூனே நீதிமன்றம் உத்தரவு!
மகாராஷ்டிரத்தை சேர்ந்த பூஜா கேத்கர், சமீபத்தில் தனி அறை மற்றும் கேபின் கேட்டதுடன் தனது காரில் சட்டத்துக்கு புறம்பாக சிவப்பு சுழல் விளக்கை பொருத்தியதாகவும் சர்ச்சையில் சிக்கினார்.
இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், பூஜா கேத்கர் போலி சான்றிதழ் வழி ஐ.ஏ.எஸ். பதவி பெற்றது அம்பலமாகது.
இதனால், சிவில் சர்வீஸ் தேர்வு முகமையில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து மாற்றுத்திறனாளி என்று அடையாளப்படுத்தியதற்காகவும், ஓ.பி.சி ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதற்காகவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேத்கரை, சிவில் சர்வீஸ் பயிற்சியிலிருந்து நீக்கி மகாராஷ்ரா அரசு அதிரடி உத்தரவிட்டது.
இதனிடையே, பூஜா கேத்கரின் தாய் மானோரமா கேத்கர், நில விவகாரம் தொடர்பாக விவசாயி ஒருவரை துப்பாக்கியை காட்டிய வழக்கில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இச்சூழலில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனோரமா கேத்கருக்கு, விவசாயிகளை மிரட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக, ஜூலை 20 வரை போலீஸ் காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பூனே நீதிமன்றம்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!