India
இந்து மதத்திற்கு எதிராக ராகுல் காந்தி பேசவில்லை : சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் கூறுவது என்ன?
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் இந்துக்களுக்கும், இந்து மதத்திற்கும் எதிரானவர்கள் என்று தொடர்ச்சியாக பிரதமர் மோடி முதல் பா.ஜ.க தொண்டவர்கள் வரை எல்லோரும் பேசினர்.இருந்தும் இவர்களது இந்த பிரச்சாரம் எடுபடவில்லை. இந்தியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் அதிக பலத்துடன் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளது. இது பா.ஜ.கவுக்கும் அச்சத்தையும் கடுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதனால்தான் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதை, திரித்து இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக பா.ஜ.கவினர் கூக்குரலிட்டு வருகிறார்கள். மேலும் ராகுல் காந்தியின் வீட்டு முன்பும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பா.ஜ.க அரசை யார் குறை சொன்னாலும், அவர்கள் இந்து விரோதிகள், இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பதை தொடர்ந்து பா.ஜ.க சித்தரித்து வருகிறது.
இந்நிலையில், இந்து மதத்திற்கு எதிராக ராகுல் காந்தி பேசவில்லை என சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவிமுக்தேஸ்வரானந்த்,”எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்து மதத்திற்கு எதிராக பேசவில்லை. ஆனால், ஊடகங்களும், பா.ஜ.க ஐ.டி செல்களும், ராகுல் காந்தி இந்து மதத்திற்கு எதிரானவர் போல பொய் பரப்பி வருகிறார்கள" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!