India
25 லட்ச மக்கள் பாதிப்பு... தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூழ்கிய 150 கிராமங்கள் - அசாமில் அவலம்!
இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வட கிழக்கு மாநிலங்கள் மிகவும் மோசமடைந்துள்ளது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ள பாதிப்பு காரணமாக பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து அங்கே இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காசிரங்கா தேசிய பூங்காவில் 92 விலங்குகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 114 விலங்குகள் உயிரிழந்துள்ளது. அதோடு 150 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. லட்சக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கிருக்கும் பல்வேறு கட்சியினரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அசாமில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓடி வருவதால் பொதுமக்கள் பலரும் சிக்கி தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அசாம் மட்டுமின்றி, பீகார், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் என ஒரு சில மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
Also Read
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!