India
பீகாரில் 9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்... அம்பலமாகும் பாஜக கூட்டணி அரசின் ஊழல்கள் !
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் இங்கு, தற்போது ஒன்றன் பின் ஒன்றாக பாலம் இடிந்து விழும் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் மாதேபூர் பிளாக்கில் ஆற்றின் குறுக்கே சுமார் 75 மீட்டர் அளவிலான பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி செலவில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்தே கட்டப்பட்டு வரும் இந்த பாலம், தற்போது இடிந்து விழுந்துள்ளது. அங்கே பரவலான மழை பெய்து வருவதால், அந்த ஆற்றின் நீர்மட்டம் சுமார் 25 மீட்டர் அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதியின் தூண் திடீரென இடிந்து விழுந்ததால், மொத்த பாலமும் நிலைகுலைந்தது. இதனால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதற்கு முன்னதாக தொடர்ந்து 4 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
இடிந்து விழுந்த 5 பாலங்கள் பட்டியல் :
* ஜூன் 19-ம் தேதி அராரியா பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட பாலம் இடிந்தது. சுமார் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், திறப்பு விழாவுக்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது.
* ஜூன் 22-ம் தேதி சிவான் பகுதியில் அமைந்துள்ள கண்டக் கால்வாய்-க்கு மேலே கட்டிமுடிக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூன் 23-ம் தேதி கிழக்கு சம்பாரண் பகுதியில் கட்டுமான பணியில் இருந்த சிறிய பாலம் இடிந்தது.
* ஜூன் 26 கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள பாலமும் இடிந்தது.
* ஜூன் 27 (நேற்று) மதுபானி பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலமும் இடிந்தது.
Also Read
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா