India
தேர்வுகளில் குளறுபடி அல்ல! : குளறுபடிகளில் தான் தேர்வு!
உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார் என பா.ஜ.க மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி வகிக்கும் மாநிலங்களில், நீட் தேர்வு முறைகேடுகள் அரங்கேறுவதை விட, மற்ற நிலை தேர்வுகளில் இடம்பெறும் முறைகேடுகளே அதிகம் எனும் அளவிற்கு அட்டூழியங்கள் தலைவிரித்தாடுகின்றன.
அவ்வகையில், சில மாதங்களுக்கு முன் பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்தில் ஆய்வு அலுவலர்கள் மற்றும் துணை ஆய்வு அலுவலர்கள் பணியில் 411 பணியிடங்களும், துணை நிலை காவலர் பணியில் சுமார் 65 ஆயிரம் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருந்த காரணத்தால், அப்பணி நிரப்புதலுக்கான தேர்வினை, சுமார் 58 இலட்சம் பேர் எழுதியிருந்தனர்.
இதனால், வேலை கண்டிப்பாக கிடைத்துவிடும், வறுமை நீங்கிவிடும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த தேர்வர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்குவது போல், “கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களால், 58 இலட்சம் பேர் எழுதிய தேர்வுகளை ரத்து செய்து, சில மாதங்களுக்கு பின் மீண்டும் தேர்வு நடத்தப்படும்” என அறிவித்து அதிருப்தியை ஏற்படுத்தியது உத்தரப் பிரதேச அரசு.
இதனைத் தொடர்ந்து குஜராத் மற்றும் பீகாரில் பள்ளிக்கல்வியிலும், மற்ற நிலை கல்வியிலும், தேர்வு விதிமீறல்கள் அதிகப்படியாக அரங்கேறின.
இந்நிலையில், இது போன்ற முறைகேடுகள் பா.ஜ.க ஆட்சி வகிக்கும் மாநிலங்களில் மட்டும் தானா என்றால், அதுவும் இல்லை, தேசிய அளவிலும் தான் என்றபடி,
ஒன்றிய அரசு தரவுகளின் படி, 78 துறைகளில் சுமார் 9 இலட்சத்து 64 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளன.
அதாவது ஒன்றிய அரசின் மொத்த பணியிடங்களில் சுமார் 30 விழுக்காடு பணியிடங்கள் நிரப்பப்படாமல் தான் உள்ளது.
இதற்கான தேர்வுகள் நடத்தப்படும் போதும், தேர்வு முடிவுகளுக்கு முன் முறைகேடுகளே முக்கிய செய்தியாக வெளிவருகிறது.
அவ்வரிசையில் தற்போது இணைந்த தேர்வு முறைகேடு தான், நீட் தேர்வு முறைகேடு.
இதில், தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் தரப்பட்டது மட்டும் சிக்கல் இல்லை. கேள்வித்தாள் கசிவும், அதற்கு இலட்சக்கணக்கில் பணப்பகிர்வு இடம்பெற்றதும் அடங்கும்.
இதுவும், குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பீகார் போன்ற பா.ஜ.க மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன.
இவ்வாறு, சரியான நிர்வாகத்தன்மையற்று, செயலாற்றி வரும் பா.ஜ.க, பல இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதற்கு, தேசிய அளவில் கண்டனங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !