India
பங்குச்சந்தை முறைகேட்டில் மோடி, அமித்ஷாவுக்கு தொடர்பு : ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
பங்குச்சந்தையில் நடந்துள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். போலியான கருத்துக் கணிப்புகளை நடத்தி சிலர் லாம் ஈட்டுவதற்காக மோடியும், அமித்ஷாவும் உதவி இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, " தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆலோசனை வழங்கியது ஏன்?
முதலீட்டு ஆலோசனை வழங்குவது அவர்களின் வேலையா? வணிகக் குழுவுக்கு சொந்தமான ஒரே ஊடகத்திற்கு இரண்டு பேரும் கேட்டி கொடுத்தது ஏன்?. போலியான கருத்துக்கணிப்புகள் மூலம் சிலர் லாபம் அடையே பங்குச்சந்தையில் முறைகேடு நடந்துள்ளது.
பங்குச்சந்தையில் நடந்துள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் முடிவு வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.38 லட்சம் கோடி இழப்பு. இதனால் சாதாரண முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது அதானி பிரச்சனையைவிட மிகவும் முக்கியமான பிரச்சனை. இது கிரிமினல் குற்றமும் கூட” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!