India
”மிகச்சிறந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்” : ராகுல் காந்தி எம்.பி புகழாரம்!
தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தேசிய அரசியலிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனிப் பெரும் தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். 5 முறை முதலமைச்சராக இருந்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் அதன் சிற்பியாக விளங்கியவர். இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆவது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கவுதம், தேசிய ஓ.பி.சி கூட்டமைப்பு தலைவர் ரத்தன்லால் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, ”கலைஞரின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவில் நானும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. பல முறை கலைஞரைச் சந்தித்து உள்ளேன். அவரோடு இணைந்து செயல்பட்டதை நினைவு கூர்கிறேன். கலைஞரின் ஆலோசனைகள் பல சமயத்தில் தனது அரசியலுக்கு உதவியாக இருந்தது. இந்த நாளில் தி.மு.கவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ”மிகச்சிறந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழ் மொழியையும், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர். அவரது வாழ்க்கை நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களிடையே நீடித்த முத்திரையைப் பதித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!