India
”பொய்களின் தொற்றுநோயை பரப்பி வரும் மோடி” : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று உத்தர பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் சிர்சா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குமாரி செல்ஜாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெய்ராம் ரமேஷ், ”தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் பொய்களை கூறி பொய்களின் தொற்றுநோயை பரப்பி வருவதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். பிரதமர் மோடியால் ஒரு உண்மையைக் கூட பேச முடியவில்லை.
2004 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி தோற்றதுபோல் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் ஆண்டும் இதே வரலாறு மீண்டும் நிகழும். பா.ஜ.கவை இந்தியா கூட்டணி வீழ்த்தும். 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள 428 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக தெரிகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!