India
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : உடந்தையாக இருந்த சக மாணவன் : 5 சிறுவர்களின் செயலால் அதிர்ச்சி !
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடன் பள்ளியில் படித்து வந்த சக மாணவர் ஒருவர் இந்த சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
கடந்த 10 ஆம் தேதி அந்த மாணவர் சிறுமியை தான் செல்லும் உடற்பயிற்சி கூடத்துக்கு வருகை தருமாறு அழைத்துசென்றுள்ளார். அங்கு அந்த நேரத்தில் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். அப்போது சிறுமிக்கு மயக்கமருந்து கலந்த பொருளை கொடுத்துள்ளார்.
அதனை உண்டதும் அந்த சிறுமி மயக்கமடைந்த நிலையில், அங்கு தந்து நான்கு நண்பர்களை வரவழைத்து சிறுமியை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதோடு சிறுமியை உடற்பயிற்சி கூடத்தின் உள்ளே பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அடுத்தநாள் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் அங்கு சென்றபோதே சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரம் வெளியே தெரிந்துள்ளது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் தலைமறைவான நிலையில், காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!