India
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் மே 13 - 4 ஆம் கட்டம், மே 20- 5 ஆம் கட்டம், மே 25 -6 ஆம் கட்டம் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1 ஆம் தேதி கடைசி கட்டமான 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டதுபோலவே இம்முறையும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வாக்குப்பதிவு கடந்த 26 ஆம் தேதிதான் நிறைவடைந்தது. மேலும் உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. அமேதியில் கிஷோர் லால் சர்மா போட்டியிடுகிறார். ரேபரேலியில் 2004 முதல் 2019 வரை தொடர்ந்து 5 முறை சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்துதான் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடுவார் என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
வேட்புமனுத்தாக்கல் கடைசி நாளில் ரேபரேலி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று ராகுல்காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!