India
”பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சூரத் மாடல் தேர்தல்தான்" : லாலு பிரசாத் எச்சரிக்கை!
7 கட்டமாக நடைபெறும் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் ஏப். 19 ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து நாளை 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், “ஜனநாயகத்தையும், அரசமைப்பையும் காக்க வேண்டிய தேர்தல் இது” என கூறி காங்கிரஸின் கை சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி சமூகவலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் சமாஜ்வாடி கட்சி நிறுவனர் லாலு பிரசாத், ”பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம், ஜனநாயகம், அரசுவேலைகள், இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு முடிவு கட்டிவிடும்.
சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகத்தை எப்படி ஒழித்தார்கள் என்பதை நாடே பார்த்தது. அதேபோல் குஜராத் மாநிலம் சூரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்து வாக்களர்களின் ஜனநாயக வாக்குரிமையைப் பறித்துவிட்டார்கள்.
இந்த முக்கியமான தேர்தலில் நாட்டை காப்பாற்ற மனசாட்சியுடனும் புத்திசாலித்தனத்துடனும் இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்து நாட்டைக் காப்பாற்றுங்கள். இல்லையெனில் பா.ஜ.க அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் அழித்துவிடும்.”என x சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!