India
கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை : என்ன காரணம்? - முழு விவரம்!
கோட்டக் மஹிந்திரா வங்கி, ஆன்லைன் மற்றும் செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2022, 2023-ம் ஆண்டுக்கான கோட்டக் மஹிந்திரா வங்கியின் செயல்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி தொழில்நுட்பக் குழு ஆய்வு நடத்தியதாகவும், வணிக திட்டங்களின் மேலாண்மை, வாடிக்கையாளர்களுக்கான அணுகல் மேலாண்மை, தரவுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த குறைபாடுகளை சரிசெய்வதற்காக அளிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கோட்டக் மஹிந்திரா வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மற்றும் செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும், கடன் அட்டைகள் வழங்குவதற்கும் தடை விதிக்கப்படுவதகாவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், கோட்டக் மஹிந்திரா வங்கி தனது பழைய வாடிக்கையாளர்கள் சேவை உள்ளிட்ட அன்றாட பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!