India
கிணற்றில் விழுந்த பூனை : காப்பாற்ற சென்று உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்... நடந்தது என்ன ?
மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகரில் வகாட் என்ற கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்று இருந்துள்ளது. தற்போது அந்த கிணற்றை யாரும் பயன்படுத்தாத நிலையில், கிணற்றில் பொதுமக்கள் குப்பைகளை போடும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த கிணற்றில் திடீரென ஒரு பூனை ஒன்று விழுந்து மேலே வர முடியாமல் கத்திக்கொண்டிருந்துள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்த மானிக் என்பவர் பார்த்துள்ளார். பின்னர் அந்த பூனையை காப்பாற்றவேண்டும் என்று அவர் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
ஆனால், கிணற்றில் இருந்த குப்பை மற்றும் சேரில் அவர் சிக்கிக்கொண்டதால் மேலே வரமுடியாமல் தவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற அவரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒரே நேரத்தில் கிணற்றில் குதித்துள்ளனர்.
ஆனால், அவர்களும் கிணற்றிலிருந்து வெளியேவராமல் சிக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணத்தில் சிக்கிய 6 பேரையும் மீட்கமுயற்சித்துள்ளனர்.
ஆனால், அதில் 5 பேர் கிணற்றில் இருந்த விஷவாயு தாக்கியும், மூச்சி திணறியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்கமுடிந்தது. பூனையை காப்பாற்ற சென்று 5 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
845 அரசு காலிப் பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு! : எப்போது விண்ணப்பிக்கலாம்?
-
அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் : 35.5 லட்சம் பேரை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு!
-
தேர்தல் ஆணையத்தை கொண்டு மக்களாட்சிக்கு வேட்டு வைக்கும் பா.ஜ.க : முரசொலி கண்டனம்!