India
RSS,இந்துத்துவ அமைப்பினருக்கு ராணுவ பள்ளிகளை நடத்த அனுமதி: ராணுவத்தை சிதைக்கும் பாஜகவின் திட்டம் அம்பலம்!
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
மறுபக்கம் இந்துத்துவ அமைப்புகளை வலுப்படுத்தி அதன் மூலம் நாட்டை மதத்தீவிரவாதிகளிடம் அளிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி அரசின் பல்வேறு அமைப்புகளில் இந்துத்துவவாதிகளை நுழைக்கும் திட்டத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ராணுவப் பள்ளிகளை இந்துத்துவமயமாக்கும் திட்டத்தோடு பாஜக களமிறங்கியுள்ளது. இந்திய ராணுவத்தில் சேருவதற்கு மாணவர்களை தயார்படுத்துவதை பிரத்யேக நோக்கமாக கொண்டு செயல்படும் ராணுவப் பள்ளிகள் நாடு முழுவதும் அமைந்துள்ளது.
அரசால் நடத்தப்பட்டு வந்த இந்த ராணுவப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, 100 சைனிக் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் நிறுவ ஒன்றிய அரசு முடிவு செயது அதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், 62% ராணுவ பள்ளிகளில் நடத்தும் அனுமதி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. அதே நேரம் எந்த ஒரு கிருஸ்தவ, இஸ்லாமிய அமைப்பின் கீழ் செயல்படும் மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை இந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற உண்மையும் தெரியவந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !