India
’உங்களையும் கைது செய்வோம்’ : பா.ஜ.கவில் இணையும் படி மிரட்டல் - அதிஷி மர்லினா பரபரப்பு!
ஒன்றிய பா.ஜ.க அரசு தங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. மேலும் எதிர்க்கட்சி ஆட்சிகளையும் கவிழ்க்கச் சதித் திட்டங்களைத் தீட்டி வருகிறது.
அப்படி டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்ற நோக்கில்தான் மதுபான கொள்ளை விவகாரத்தை கையில் எடுத்து தொடர்ச்சியாக ஒருவருடத்திற்கு மேலாக சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறது. அதன் உச்சமாகத்தான் தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் மேலும் 4 ஆம் ஆத்மி அமைச்சர்களை கைது செய்ய ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளிப்படையாகவே டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அப்போது பேசிய அமைச்சர் அதிஷி, "பா.ஜ.கவில் இணையும் படி தனக்குத் தூது வந்துள்ளது. அப்படி இல்லை என்றால் ஒரு மாதத்திற்குள் அமலாக்கத்துறை உங்கள் வீட்டிற்கு வரும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நான் உட்பட ராகவ் சதா, துர்கேஷ் பதக், சவுரப் பரத்வாஜ் ஆகிய நான்கு அமைச்சர்களையும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் சிறைக்குச் சென்றாலும் ஆம் ஆத்மி கட்சி ஒற்றுமையுடன் வலிமையுடன் செயல்பட்டு வருகிறது. இதை உடைக்க ஆம் ஆத்மி கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!