India
பெற்றோர்களே உஷார் - குழந்தையின் தொண்டையில் சிக்கிய 10 செ.மீ மீன் : நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதியின் கஞ்சேன ஹள்ளியை சேர்ந்தவர்கள் யோகேஷ் - ரோஜா தம்பதி. இவர்களுக்கு பிரதீக் என்ற 11 மாத ஆண் கை குழந்தை உள்ளது.
இந்நிலையில் இவர்களது வீட்டிலிருந்த மீன் தொட்டியிலிருந்து மீன் ஒன்றை எடுத்து பாட்டி, தனது பேரக் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துள்ளார்.
அப்போது குழந்தை பாட்டியின் கையை தட்டி மீனைப் பிடிக்கப் பார்த்தபோது, மீன் தவறி குழந்தையின் வாயில் விழுந்து தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது.
உடனே பெற்றோர் குழந்தையை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குக் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஷிவமொகாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்குப் பரிசோதித்தபோது குழந்தையின் தொண்டையில் இரண்டு மீன்கள் சிக்கி இருப்பது தெரியவந்தது. பிறகு உடனே சிறிய அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தொண்டையிலிருந்த மீனை மருத்துவர்கள் அகற்றினர். இந்த சிக்சையை அடுத்து தற்போது குழந்தை நலமாக உள்ளது.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !