India
பெற்றோர்களே உஷார் - குழந்தையின் தொண்டையில் சிக்கிய 10 செ.மீ மீன் : நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதியின் கஞ்சேன ஹள்ளியை சேர்ந்தவர்கள் யோகேஷ் - ரோஜா தம்பதி. இவர்களுக்கு பிரதீக் என்ற 11 மாத ஆண் கை குழந்தை உள்ளது.
இந்நிலையில் இவர்களது வீட்டிலிருந்த மீன் தொட்டியிலிருந்து மீன் ஒன்றை எடுத்து பாட்டி, தனது பேரக் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துள்ளார்.
அப்போது குழந்தை பாட்டியின் கையை தட்டி மீனைப் பிடிக்கப் பார்த்தபோது, மீன் தவறி குழந்தையின் வாயில் விழுந்து தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது.
உடனே பெற்றோர் குழந்தையை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குக் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஷிவமொகாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்குப் பரிசோதித்தபோது குழந்தையின் தொண்டையில் இரண்டு மீன்கள் சிக்கி இருப்பது தெரியவந்தது. பிறகு உடனே சிறிய அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தொண்டையிலிருந்த மீனை மருத்துவர்கள் அகற்றினர். இந்த சிக்சையை அடுத்து தற்போது குழந்தை நலமாக உள்ளது.
Also Read
-
அப்போது தோனி, இப்போது KL ராகுல்: சர்ச்சையில் அணி உரிமையாளர்... வீரர்கள் மத்தியில் ஏற்படும் பாதிப்பு என்ன?
-
சர்வாதிகாரத்திற்கு சம்மட்டி அடி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்... இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவேற்பு !
-
நட்சத்திரம் போல காட்சியளித்த விண்வெளி ஆய்வு மையம்... குஷியில் சென்னை மக்கள்!
-
கிரிக்கெட்டை அழிக்கும் IPL அதிரடி : ஒரே ஆண்டில் மாறிய டி20 கிரிக்கெட்டின் முகம் : ஒரு பகுப்பாய்வு !
-
நீட் முறைகேடு : “எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?” - கனிமொழி NVN சோமு கேள்வி !