India
ED அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரிடம் ரூ.164 கோடி பறிக்க முயற்சி : மும்பையில் 6 பேர் கைது!
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அமைப்புகளை வைத்து ஒன்றிய அரசு மிரட்டி வருகிறது. இந்நிலையில் மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரிடம் ரூ.164 கோடி பறிக்க முயற்சி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை பெயரை சொல்லி ரூ.164 கோடி கேட்டு மிரட்டுவதாக மும்பையைச் சேர்ந்த ஓம்கார் டெவலப்பர்ஸ் (Omkar Developers) நிறுவனம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளது. இந்த புகாரை விசாரித்தபோதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஓம்கார் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கும் தனுகா டெவலப்பர்ஸ் (Dhanuka Developers) நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து ஓம்கார் நிறுவனத்தின் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் தனுகா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் 2009ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்துதான் தனுகா நிறுவனத்தின் நிர்வாகி சதீஷ் தனுகா மற்றும் அவரது மருமகன் ராகேஷ் கெடியா ஆகியோர் அமலாக்கத்துறை பெயரை பயன்படுத்தி ஓம்கார் டெவலப்பர்ஸிடம் இருந்து மிரட்டி ரூ.164 கோடி பணம் பறிக்க திட்டமிட்டனர்.
இந்த திட்டத்தின்படி ஓம்கார் நிறுவனத்தை மிரட்டி வந்துள்ளது. இந்நிலையில்தான் அமலாக்கத்துறை பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட ஹிரேன் ரமேஷ் பகத், அமே சாவேகர், ராஜேந்திர ஷிர்சத், ராகேஷ் கேடியா, கல்பேஷ் போஸ்லே, அவ்னிஷ் துபே ஆகிய 6 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதற்கு பின்னால், தனுகா நிறுவனம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வுக்கு கண்டனங்கள் வலுக்கும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலேவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "பா.ஜ.கவுக்காக அமலாக்கத்துறை பெயரில் பணம் பறிக்கப்படுகிறதா?" என்று குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!