India
மகனை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை : பெங்களூருவை அதிரவைத்த சம்பவம்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள காமாட்சி பாளையத்தில் வசித்து வருபவர் நர்தன் போப்பன்னா. இவரது தாய் உடல்நலம் சரியில்லாததால் வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருகிறார். தந்தை குடி பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் தினமும் குடித்து விட்டு மனைவியின் மருத்துவ சிகிச்சையை கூட கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மதுவாங்குவதற்காக மகனிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு பணம் தரமுடியாது என தந்தையிடம் மகன் கூறியுள்ளார்.இதையடுத்து தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தந்தையை நர்தன் போப்பன்னா ஒரு அறையில் அடைத்து பூட்டியுள்ளார். பின்னர் கூச்சலிட்டுக் கொண்டிருந்த தந்தையின் சத்தம் அமைதியானதை அடுத்து இவர் வீட்டின் ஹாலில் அமர்ந்துள்ளார்.
ஆனால் அறைக்குள் இருந்த அவரது தந்தை அங்கிருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து கதவில் சுட்டுள்ளார். இதில் குண்டு கதவை துளைத்துக்கொண்டு வெளியே அமர்ந்திருந்த நர்தன் போபன்னா தொடையில் பாய்ந்துள்ளது.
இதில் ரத்தவெள்ளத்தில் துடித்த அவர் இதுகுறித்து தனது சகோதரிக்கு போன்செய்து கூறியுள்ளார். பின்னர் சகோதரி அருகே உள்ள உறவினருக்கு இந்த சம்பவத்தை தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படி வலியுறுத்தியுள்ளனார். ஆனால் இவர்கள் வருவதற்குள் ரத்தம் அதிகம் வெளியே சம்பவ இடத்திலேயே நர்தன் போப்பன்னா உயிரிழந்து சடலமாக இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து நர்தன் போப்பன்னாவின் தந்தை சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பெற்ற மகனையே தந்தை சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தோல்வி பீதியில் வாக்காளர்களை மிரட்டும் பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!
-
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் : பட்டியலிட்டு தி.மு.க பெருமிதம்!
-
பாஜகவுக்கு வாக்களிக்காத தலித் இளைஞர் மீது கொடூர தாக்குதல் : உ.பி-யில் யோகி போலிஸ் காட்டுத் தர்பார்!
-
டீ, காபி குடிப்பவர்களா நீங்கள்? : அப்போ உங்களுக்கான முக்கிய செய்திதான் இது!
-
”பா.ஜ.க அமைதியாக வெளியேறாது கொடூரமானதாக மாறும்” : எச்சரிக்கும் பரகலா பிரபாகர்!